★★ அன்பு சகோதர சகோரிகளே இதோ உலகத்தின் கடைசி காலம். இயேசு வருகிறார் மனந்திரும்பி இயேசுவின் வருகைக்கு ஆயத்தமாவோம்.

Monday, December 2, 2013

வேதாகம நூல்கள்


ஆதியாகமம்

பெயர் விளக்கம்:

    எபிரேய மொழியில் ஆதியாகமம் 1:1 பெரேசித் (ஆதியிலே) என துவங்குகிறது. இதனுடைய பொருள் தொடக்கம். துவக்கமும் முடிவுமில்லாத இறைவனைத்தவிர மற்ற படைப்புகள் அனைத்தின் தொடக்கம் அல்லது ஆரம்பத்தை இப்புத்தகம் விளக்குவதால் இப்பெயர் பெற்றது. இதன் ஆங்கில பெயர் ஜெனிசிஸ் (புநநௌளை) கிரேக்க வார்த்தையான ஜெனசாஸ் மூலம் உருப்பெற்றது.

ஆசிரியர்:

     இப்புத்தகத்தின் குறிப்புகளிலிருந்து நான்கு விதமான பகுதிகள் அல்லது பிரிவுகள் (யெகோவா, ஏலோகிம், ஆசாரியர், உபபந்தம்) இணைத்திருப்பதை காணமுடிகிறது அதாவது நான்குவிதமான மூலங்கள் (Source) இப்புத்தகத்தை தொகுக்க பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை சற்று ஒன்றுக்கொன்று வேறுபாடானவை. இதை அடிப்படையாகக் கொண்டு இந்நூலின் ஆசிரியர் யார் என்பதைக் குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவினாலும் யூதர்களும், கிறிஸ்தவர்களும் பொதுவாக மோசே இந்நூலை தொகுத்தவர் அல்லது எழுதியவர் என்பதை ஏற்றுக்கொள்ளுகின்றனர்.

காலம்:

     உலகம் உருவான நாள்முதல் சுமார் கி.மு. 1800 ஆண்டுவரையுள்ள சம்பவங்களை ஆதியாகமம் தெரிவிக்கின்றது.

     வரலாற்றுச் சம்பவங்களின் அடிப்படையில் மோசேயின் காலம் ஏறத்தாழ சரியாக கூறமுடியும். 1இராஜாக்களின் புத்தகத்தில் (6:1) சாலமோன் அரசாண்ட 4ம் வருடம், அதாவது இஸ்ரவேலர் எகிப்திலிருந்து புறப்பட்டுச் 480 வது வருடம் எருசலேம் தேவாலயக் கட்டடப்பணி ஆரம்பமானது. சாலமோன் நாலாவது ஆட்சி ஆண்டு சுமார் கிமு. 966. எனவே 1446 வது ஆண்டு மோசே வழிநடத்துதல் பணியை மேற்கொண்டார். இப்புத்தகத்தை மோசே எழுதியிருப்பாரானால் 40 வருட வனாந்திர வாழ்க்கையின் கடைசியில் இந்நூலை எழுதியிருக்ககலாம் எனக் கருதப்படுகிறது.

பின்னணி:

     ஆதியாகமம் 1-38 அதிகாரங்களில் காணப்படும் நாகரீகம், படைப்பு, வம்சவரலாறு, ஜலப்பிரளயம், புவியியல், மக்களின்-யாத்திரை, ஆடுமேய்த்தல், நிலம் சம்மந்தமான காரியங்கள் அகியவை மெசபட்டோமிய வாழ்க்கைக்கு மிக ஒத்துக் காணப்படுகிறது. இவற்றில் நடைபெற்ற பெரும்பான்மையான சம்பவங்கள் மெசபட்டோமியாவில் நடைபெற்றதாகவே காணப்படுகிறது. ஆசிரியர் மனிதனின் முதல்;வீடான ஏதேன் தோட்டத்தை இப்பகுதியாகவே காண்பிக்கிறார். பாபேல் கோபுரம் கட்டப்பட்டதும்ஆபிரகாம் பிறந்த இடம், ஈசாக்குக் பெண்கொண்டது, யாக்கோபு 20 வருடங்களாக வாழ்ந்தது ஆகியவை இப்பகுதியை மையமாகக் கொண்டது.

     39-50 அதிகாரங்கள் எகிப்திய பாரம்பரியத்தை விளக்கக்கூடியதாக அமைகிறது.

நோக்கமும் – செய்தியும்:

     ஆதியாகமம் படைப்பின் முழுவிபரத்தையும் தெளிவாக்குகிறது. தேவன் படைப்பின் காரணராகவும், படைப்பின் சிகரமாக மனிதனை தன்னுடைய சாயலின்படி படைத்ததையும், அவர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்து உலகை ஆசீர்வதித்ததையும் தெரிவிக்கிறது. முதல் படைப்பான ஆதாம், ஏவாள் என்பவர்கள் கீழ்படியாமல் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்து அதற்கு தன்டனையாக சாபத்தை பெற்றுக்கொண்டதையும் விளக்குகிறது. எனினும் இறைவனை செய்லாற்றுகிறவராகவே சித்தரிக்கிறது. இரட்சிப்பின் ஆரம்பமாக இறைவன் ஒரு நபரை, குடும்பத்தை வம்சத்தை தெரிந்து கொண்டு, உலகத்திற்கு ஆசீர்வாதத்தை கொடுக்க விரும்புவதை தெரிவிக்கிறது. பல கடவுள் வணக்கதிற்கு வழிதவறிய மக்களை ஒரு கடவுள் வணக்கத்திற்;கு நேராக வழிநடத்தியதை விவரிக்கிறது.

ஆதியாகமத்தில் தொடக்கங்கள்



1.    ஆதியாகமம் 1:1-25       உலகத்தின் தொடக்கம்

2.    ஆதியாகமம் 1:26-2:25     மனித குலத்தின் தொடக்கம்

3.    ஆதியாகமம் 3:1-7        பாவத்தின் தொடக்கம்

4.    ஆதியாகமம் 3:8-24       இரட்சிப்பு உறுதிமொழியின் தொடக்கம்

5.    ஆதியாகமம் 4:1-15       குடும்ப வாழ்வின் தொடக்கம்

6.    ஆதியாகமம் 4:16-9:29     மனிதன் உண்டாக்கிய நாகரீகத்தின் தொடக்கம்

7.    ஆதியாகமம் 10-11       உலக நாடுகளின் தொடக்கம்

8.    ஆதியாகமம் 12-50       எபிரேய மக்களின் தொடக்கம்
__________________________________________________________________________
யாத்திராகமம்

பெயர் விளக்கம்:

     யாத்திராகமம் என்ற கிரேக்க சொல்லுக்கு புறப்பாடு அல்லது வெளிவழி எனப்பொருள் (எபிரேயர் 11:22) ஆதியாகமத்தில் காணப்படும் எல்லா தோல்விகளுக்கும் விடுதலையாக, எழுச்சிமிக்கதாக, இறைவன் மனிதனை காப்பதற்கு செயலாற்றுபவராக, மீட்பின் பணியைக் கூறுகிறது.

ஆசிரியர்:

     யாத்திராகம புத்தகத்தின் ஆசிரியர் குறித்து பல கருத்துக்கள் நிலவினாலும் யாத்திராகமத்தில் உள்ள பல பகுதிகள் மோசே எழுதியதாக உறுதிப்படுகிறது. (17:14 24:4 34:27). மேலும் யோசுவா 8;:30ல் மோசேயின் நியாயப்பிரமாண புத்தகத்தில் எழுதியிருக்கிறபடி என குறிப்பிடுகிறதை வாசிக்கிறோம். புதிய ஏற்பாட்டிலும் இதற்கான குறிப்புகளைக் காணலாம். (உதா. மாற்கு 7:10, 12:26, லூக்கா 2:22-23)

காலம்:

     உலக வரலாறு, எகிப்து சாம்ராஜ்யத்தின் மன்னன் பார்வோன் மூன்றாவது துத்மஸ் மற்றும் அவனது மகன் இரண்டாவது அமுன்ஹோதேப் காலத்தில் யூத மக்கள் அடிமைப்படுத்தப்பட்டதாக கூறுகிறது. இதைத்தொடர்ந்து வேத குறிப்பின்படி யாத் 1:11 ல் ராமசேஸ் என்னும் பெயர்கொண்ட பார்வோன் முதலாம் சேத்தி மற்றும் அவனுடைய மகன் இரண்டாம் ராமசேஸ் காலத்தில் இஸ்ர வேலர் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்றனர். வருடமாகும். பாரம்பரிய குறிப்பின் அடிப்படையில் கி.மு. 1446 ஆகும். இப்புத்தகத்தை மோசே எழுதியிருப்பாரானால் 40 வருட வனாந்திர வாழ்க்கையின் கடைசியில்  இந்நூலை எழுதியிருக்ககலாம் எனக் கருதப்படுகிறது.

நோக்கமும் செய்தியும்:

     யாத்திராகமம் பழைய ஏற்பாட்டில் இரட்சிப்பின் மேன்மையைக் கூறுகிற முன் நூலாக இருக்கிறது. இந்நூல் இருளும் துக்கமும் நிறைந்த நிலையில் தொடங்குகிறது. இருந்தாலும் மகிமையில் முடிகிறது. இந்நூல் இறைவன் அடிமையாக்கிய தம் மக்களைத் தம் அன்பினால் மீட்பதற்கு எவ்வாறு இறங்கி வந்தார் என்று தொடங்கி விடுதலையாக்கப்பட்ட மக்கள் மத்தியில் அவர் எவ்வாறு இறங்கிவந்தார் என்று கூறி முடிகிறது.

     யாத்திராகமத்தில் இறைவன், தன் பெயர் (யாத்திராகமம் 3:14) குணாதிசயங்கள், இரட்சிப்பு, சட்டம் (நியாயப்பிரமாணம்) தான் வழிபடப்படவேண்டிய முறை ஆகியவற்றை வெளிப்படுத்துகிறார். முதல் உடன்படிக்கையின் நடுவரான மோசே தெரிந்தெடுக்கப்படுதல், ஆசாரியத்துவத்தின் ஆரம்பம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது.

     இறைவன் வரலாற்றிற்கும் ஆண்டவராயிருந்து அற்புதங்களை செய்தது குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேலருடைய துன்பங்கள் அல்லது எகிப்தியர் மீது வந்த வாதைகள் அவருடைய ஆளுகைக்கு உட்பட்டதே. பார்வோன், எகிப்தியர், இஸ்ரவேலர் அனைவரும் அவருடைய வல்லமையை கண்டனர். இறைவன் எகிப்திய தேவர்களுக்கெல்லாம் தேவன் என்பதை விளக்கும் புத்தகமாக இது அமைந்துள்ளது.
__________________________________________________________________________
தொடரும்.....
மேலும் விபரங்களுக்கு 

__________________________________________________________________________

1 comment: